Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி
ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் சாயிரா நரசிம்ம ரெட்டி இன்னொரு பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி உள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தியா முழுக்க இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எப்படி
இந்த படத்தின் விழாவில் நடிகர் சிரஞ்சீவி விஜய் சேதுபதி குறித்து பேசினார். அவர் தனது பேச்சில், விஜய் சேதுபதி மிகவும் பிஸியான நடிகர். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கிறார். வரிசையாக நிறைய படங்களில் இடைவெளியே விடாமல் நடித்து வருகிறார். கடினமாக உழைக்கிறார்.
வேலை முக்கியம்
இரவு,பகல் பார்க்காமல் அவர் வேலை பார்க்கிறார். அவர் அண்ணா அண்ணா என்றுதான் என்னிடம் பேசுவார். சாயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிப்பதற்கு அவர் ஏற்றுக்கொண்டது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் படத்திற்காக கடினமாக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.
என்ன செய்தார்
இதை கேட்டதும் நடிகர் விஜய் சேதுபதி வேகமாக சிரஞ்சீவி அருகே வந்து அவரிடம் கை கொடுத்தார். அதோடு சிரஞ்சீவி பேசிக்கொண்டு இருக்கும் போதே விஜய் சேதுபதி அவரின் காலில் விழுந்தார். விஜய் சேதுபதி இப்படி செய்ததுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது.
கால்
ஏன் இப்படி இன்னொரு நடிகரின் காலில் விஜய் சேதுபதி விழுகிறார். ஏற்கனவே தமிழ் நாட்டில் பலர் காலில் விழுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பிற மாநிலத்திற்கு சென்று, அங்கு ஒரு நடிகரின் காலில் விழுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூடாது
அவர் அப்படி செய்திருக்க கூடாது என்று பலர் கூறி வருகிறார்கள். அதே சமயம் சிரஞ்சீவி பெரிய நடிகர். அவர் காலில் விஜய் சேதுபதி விழுவது தவறில்லை. இதெல்லாம் குரு - சிஷ்யன் உறவு போன்றது. அதில் எந்த விதமான தவறும் இருக்க முடியாது, என்று சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.