Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோ .. ஹீரோ ..
இயக்குநர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் விஜய்,தற்போது கவிதாலயா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
முன்பு ஒருமுறை கவிதாலயாவின் படம் ஒன்றை தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்தது தொடர்பான தகராறில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும்,பாலச்சந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கவிதாலயா தயாரிப்பில் நடிக்கவிருந்த விஜய்யின் படம் ஒன்று கைவிடப்பட்டது.
இந்நிலையில் விஜய்க்கும், கவிதாலயாவுக்கும் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளது. கவிதாலயா தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தற்போது விஜய் நடித்து வரும் "வசீகரா" படம் முடிவடைந்து விட்டது. "கீதை" என்ற படம் தொடங்கியுள்ளது. "வசீகரா" பொங்கலுக்கும், "கீதை"தமிழ்ப் புத்தாண்டுக்கும் ரிலீஸ் ஆகின்றன.
"கீதை" படத்தை முடித்துக் கொடுத்த பிறகுதான் கவிதாலயா படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. இயக்குனரும்முடிவாகவில்லை.
இந் நிலையில் "கீதை" பட டைட்டிலுக்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புவலுத்தால் தலைப்பு மாறலாம்.