Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
தவசி படத்தில் விஜயகாந்த்திற்காக கவிஞர் பா.விஜய் அட்டகாசமான (விஜய்காந்துக்கு!) பாடல் ஒன்றைஎழுதியுள்ளார்.
விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது தனிச் சிறப்புகள் குறித்தும் இந்தப் பாடலில் மறைகமாககூறப்பட்டுள்ளது.
பாடலை பா.விஜய் எழுதிக் காட்டியதும், விஜயகாந்த் ரொம்பவே குஷியாகி விட்டாராம். இந்தப் பாடலை படத்தில்தான் அறிமுகமாகும் காட்சியில் வைக்கச் சொல்லியுள்ளாராம்.
சரி பாட்டைப் பார்ப்போமா?
தஞ்சாவூப் கோபுரந்தான்
தலைப்பாகை கட்டிக் கொண்டு
நடை நடந்து வாரதைப் போல்
நம்ம அய்யா வராரு
சாதி சாதிக்கொரு
சங்கம் வச்ச நாட்டுக்குள்ளே
எல்லா சாதிக்கொரு
கோயில் போல வாராரு
சங்கத் தமிழ்நாட்டு
சிங்கத் தமிழன் வாராரு
கறுப்புச் சூரியனா
கம்பீரமா வாராரு
ஏழை சனங்களுக்கு
பங்காளியா வாராரு
வாரிக் கொடுப்பதுல
வரலாறா வாராரு
அய்யா ஊர்வலத்துல
ஆரத்தி எடுக்கத்தான்
ஆகாச சூரியனே
ஆசப்படும் நீ பாரு
சொன்னா சொன்ன சொல்லில்
கடைசி வரை நிப்பாரு
நின்னா நின்ன எடம்
நிச்சயமா ஜெயிப்பாரு!