Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடுத்த ஆட்டத்திற்குத் தயாரான விஜயகாந்த் மகன்
சென்னை: சகாப்தம் படத்தைத் தொடர்ந்து 2 வது படத்திற்கான கதைத் தேர்வில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன்.
சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமான சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறத் தவறியது. தொடர்ந்து வேறு படங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அமைதி காத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சண்முகப் பாண்டியன் நடிக்கப் போகும் படத்திற்கான கதை விவாதத்தில் கேப்டன் குடும்பத்தினர் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
இப்படம் அநேகமாக ஒரு வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் விஜயகாந்த் தனது மகனை அடுத்ததாக வரலாற்று படத்தில் பார்க்கவே விரும்புகிறாராம்.
தற்போது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் கதைகளை கேட்டு வருவதாகவும் இவர்கள் கதையை இறுதி செய்து விஜயகாந்திடம் தெரிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் கதையை இறுதி செய்து அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.