Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்த ஆட்டத்திற்குத் தயாரான விஜயகாந்த் மகன்
சென்னை: சகாப்தம் படத்தைத் தொடர்ந்து 2 வது படத்திற்கான கதைத் தேர்வில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன்.
சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமான சகாப்தம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறத் தவறியது. தொடர்ந்து வேறு படங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அமைதி காத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சண்முகப் பாண்டியன் நடிக்கப் போகும் படத்திற்கான கதை விவாதத்தில் கேப்டன் குடும்பத்தினர் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
இப்படம் அநேகமாக ஒரு வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் விஜயகாந்த் தனது மகனை அடுத்ததாக வரலாற்று படத்தில் பார்க்கவே விரும்புகிறாராம்.
தற்போது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் கதைகளை கேட்டு வருவதாகவும் இவர்கள் கதையை இறுதி செய்து விஜயகாந்திடம் தெரிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் கதையை இறுதி செய்து அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.