Don't Miss!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம், பிரபாஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி
சென்னை: வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நடிகர்கள் விக்ரம் ரூ. 35 லட்சமும், பிரபாஸ் ரூ. 25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ரூ. 19, 500 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் கேரளாவுக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். தலா ரூ. 25 லட்சம் அளித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஆகியோர் கேரளாவுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கேரள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.