Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம், பிரபாஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி
சென்னை: வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நடிகர்கள் விக்ரம் ரூ. 35 லட்சமும், பிரபாஸ் ரூ. 25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ரூ. 19, 500 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் கேரளாவுக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். தலா ரூ. 25 லட்சம் அளித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஆகியோர் கேரளாவுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கேரள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.