ஏழைக் குழந்தைகளுக்கு சத்தமில்லாமல் விக்ரம் செய்த பேருதவி.. டி வி நிகழ்ச்சியில் வெளியான உண்மை!
பத்து அரிசி மூட்டையை தானமாகக் கொடுத்தாலே பத்து கோடி ரூபாய்க்கு விளம்பரம் தேடுவோர் மத்தியில், பல ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக கோடிக் கணக்கில் உதவி செய்தும் மூச்சுக் காட்டாமலிருக்கிறார் ஒருவர்... அவர்தான் நடிகர் விக்ரம்.
பத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு அவர் சத்தமில்லாமல் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைப் பெற்றோர்கள் தங்கள் மகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கும், படிப்புக்கும் விக்ரம்தான் முழுமையாக செலவு செய்தார் என்பதைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துநர் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரித்தார். அப்போதுதான் இந்த உண்மையை வெளியிட்டார் விக்ரம்.
தான் இதுபோல பல குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு மட்டும் உதவுவதாகவும், ஆனால் இதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார் விக்ரம்.
மேலும் ஐ படத்துக்காக தான் பெற்ற சம்பளத்தில் ஒரு பகுதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகச் செலவிட்டாராம் விக்ரம்.
இப்போது விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரு புதிய படங்களிலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications