Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...!
சாமி 2 படமும் சீமராஜா படமும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரே நாளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் விக்ரமின் சாமி 2வும், சிவகார்த்திகேயனின் சீமராஜாவும் ஒரே நாளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி 2ம் பாகத்தை ஹரி இயக்கியுள்ளார். சாமி முதல் பாகத்தை போலவே இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாமி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதிக்கு பிறகு ரிலீஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், சீமராஜாவுக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் சாமி 2வும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விக்ரமுடன் சிவகார்த்திகேயன் மோதுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.