எனக்குப் பிடிச்ச வில்லன் ஒன்று இல்லை.. 2 இல்லை.. மூனு பேரு.. ரஜினி சொன்ன ரகசியம்
ரஜினி தனக்கு பிடித்த வில்லன்கள் யார் யார் என்பதை காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: வாழ்வில் தன்னுடைய முக்கிய வில்லன்கள் யார் யார் என நடிகர் ரஜினிகாந்த் காலா இசை வெளியீட்டு விழாவில் பட்டியலிட்டார்.
ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், பாட்ஷா மார்க் ஆண்டனியும், படையப்பா நீலாம்பரியும் தான் தன்னுடைய முக்கிய வில்லன்கள் என்றார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "காலா படம் அரசியல் படம் இல்லை. ஆனால் இதில் அரசியல் இருக்கும். இந்த படம் ஒரு வித்தியாசமான படம்.
என் வாழ்வில் இரண்டு வில்லன்கள் தான் மிகவும் சவாலானவர்கள்.
ஒன்று பாட்ஷா மார்க் ஆண்டனி மற்றொன்று படையப்பா நீலாம்பரி. இந்த இரண்டு வில்லன்களுக்கு அப்புறம், காலா படத்தின் வில்லன் நானாபடேகர் தான் எனக்கு சவாலான வில்லன்.
வில்லன் கதாப்பாத்திரத்தை அவர் மிக சிறப்பாக செய்திருக்கிறார். படப்பிடிப்பின் போது அவரை சமாளிப்பதே மிகவும் கடினமானது. அப்படி ஒரு கேரக்டர் அவர்".
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications











