ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய விஷால்!
ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார் நடிகர் விஷால்.
நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாயும் புலி' படத்தில் நடிக்கும் விஷால், சினிமாவைத்தாண்டி விஷால் தன்னுடைய நற்பணி மன்றம் சார்பாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

சமீபத்தில் இவர் திருச்சி மாவட்டம் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.
இப்போது தனது அகில இந்திய விஷால் நற்பணி மன்றம் சார்பாக ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்களை வழங்கியிருக்கிறார் விஷால்.
இவ்விழாவில் விஷாலுக்கு மாலை அணிவித்து அவருடைய ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார் விஷால்.


Click it and Unblock the Notifications











