Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய விஷால்!
ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார் நடிகர் விஷால்.
நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாயும் புலி' படத்தில் நடிக்கும் விஷால், சினிமாவைத்தாண்டி விஷால் தன்னுடைய நற்பணி மன்றம் சார்பாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் திருச்சி மாவட்டம் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.
இப்போது தனது அகில இந்திய விஷால் நற்பணி மன்றம் சார்பாக ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்களை வழங்கியிருக்கிறார் விஷால்.
இவ்விழாவில் விஷாலுக்கு மாலை அணிவித்து அவருடைய ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார் விஷால்.