twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாயும் புலி Vs தியேட்டர்காரர்கள்... தீர்த்து வைத்த விஷால்!

    By Shankar
    |

    ஒருவழியாக இன்று செங்கல்பட்டு ஏரியாவிலும் விஷாலின் பாயும் புலி படம் வெளியாகிவிட்டது. பிற்பகல் 12 மணிக்கு மாயாஜால் உள்ளிட்ட செங்கல்பட்டு ஏரியா அரங்குகளில் பாயும் புலி வெளியானது.

    பாயும் புலி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட, படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் கணிசமான பணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்து தடை போட்டனர் ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கிய சிலர்.

    இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் படத்தை வெளியிட முடிவு செய்தனர் தயாரிப்பாளர்கள்.

    Vishal resolved Paayum Puli issue

    இந்த நிலையில் படம் வெளியாக 12 மணி நேரமே இருந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களிடம் விடிய விடிய பேச்சு நடத்தினார் படத்தின் நாயகன் விஷால்.

    இறுதியில் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டனர் தியேட்டர்காரர்கள். பேச்சுவார்த்தை முடிய தாமதமானதால், படத்தின் க்யூபுக்கான கேடிஎம் வழங்குவது தாமதமானது. எனவே பிற்பகல் 12 மணிக்குதான் செங்கல்பட்டு பகுதிகளில் பாயும் புலி ரிலீசானது.

    English summary
    Actor Vishal has intervened the Chengalpattu area theater owners issue and released Paayum Puli smoothly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X