twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியது ஏன்? விஷால் விளக்கம்

    By Shankar
    |

    ஆம்பள படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டிய வேலைகளில் பிஸியாக இருப்பதாலேயே நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டதாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிப்பு, தயாரிப்பு, இசை வெளியீடு என ஏக பிஸியாக உள்ளார் விஷால்.

    Vishal's explanation for his walkout from CCL 2015

    இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், படங்களில் பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விஷால் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

    இதுகுறித்து, இத்தாலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் முதலில் முக்கியம். ஆம்பள படம் பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆகையால், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன்," என்று கூறியுள்ளார்.

    நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணிக்கு கேப்டனாக இருந்தார் விஷால். இப்போது ஆண்டுக்கு இரு படங்கள் என்று ரசிகர்களுக்கு தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் படங்களைத் தருவதில் மும்முரம் காட்டுகிறார்.

    English summary
    Vishal has gave an explanation for his withdrawal from CCL 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X