Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியது ஏன்? விஷால் விளக்கம்
ஆம்பள படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டிய வேலைகளில் பிஸியாக இருப்பதாலேயே நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டதாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிப்பு, தயாரிப்பு, இசை வெளியீடு என ஏக பிஸியாக உள்ளார் விஷால்.
இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், படங்களில் பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விஷால் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து, இத்தாலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் முதலில் முக்கியம். ஆம்பள படம் பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆகையால், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன்," என்று கூறியுள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணிக்கு கேப்டனாக இருந்தார் விஷால். இப்போது ஆண்டுக்கு இரு படங்கள் என்று ரசிகர்களுக்கு தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் படங்களைத் தருவதில் மும்முரம் காட்டுகிறார்.