Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2015-ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட்: விஷால் ஆட மறுப்பு... ஜீவா புதிய கேப்டன்!
சென்னை: 2015-ம் ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆட விஷால் மறுத்துவிட்டதால், அவருக்குப் பதில் நடிகர் ஜீவா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 மொழி நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்குகின்றன. பிப்ரவரி இறுதி வரை இந்த போட்டி நடைபெறுகின்றன.
இதுவரை தமிழ், நடிகர்கள் அணிக்கு கேப்டனாக விஷால் இருந்து வந்தார். அவர் இந்த வருடம் நடைபெறும் போட்டியில் ஆடவில்லை. கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறார்.
படங்களில் பிசியாக நடிப்பதாலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும் நட்சத்திர கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
விஷாலுக்கு பதில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டன் பதவிக்கு ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் ஜீவாவையே தேர்வு செய்துள்ளனர்.
தமிழ் நடிகர்கள் அணியில் ஆர்யா, ஜித்தன் ரமேஷ், பரத், சாந்தனு போன்றோர் முன்னணி ஆட்டக்காரர்களாக உள்ளனர். இந்த முறை நடிகர் சிம்புவும் இந்த அணியில் இணைந்து ஆடப்போகிறாராம்.
ஏன் விஷால் ஆடவில்லை?
படங்களில் பிஸியாக இருப்பதால்தான் விஷால் ஆடவில்லை என்று கூறப்பட்டாலும், அணி நிர்வாகத்துக்கும் விஷாலுக்கும் ஒத்துவராததே அவர் ஆடாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அணி நிர்வாகத்தில் சரத்குமாரும், ராதிவும் பிரதானமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.