Don't Miss!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் ஆர்யா-விஷ்ணு கூட்டணி
பில்லாவை வெற்றிகரமாக முடித்துள்ள விஷ்ணுவர்த்தன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்திற்கு சர்வம் என பெயரிட்டுள்ளார். முதலில் இதில் ஆர்யா நடிப்பதாக முடிவானது. பின்னர் நான் கடவுள் படத்தில் ஆர்யா பிசியாக இருந்த காரணத்தால், ஆர்யாவை விட்டு விட்டு சூர்யாவிடம் போனார் விஷ்ணு. பின்னர் அவரும் டிராப் ஆகி, அர்ஜூன் என முடிவானது.
இப்போது அதுவும் டிராப் ஆகி மீண்டும் ஆர்யாவே ஹீரோவாக்கப்பட்டுள்ளார். இதை முறைப்படி அவர் அறிவித்துள்ளார்.
அடுத்த படம் குறித்து விஷ்ணுவர்த்தன் கூறுகையில், பில்லா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது சந்தோஷம் தருகிறது. அஜீத்துக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கும், அவர்கள் கொடுத்த ஆதரவுக்காக நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
எனது அடுத்த படமான சர்வம் தொடர்பான விவாதங்கள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. முதலில் சூர்யாவை முடிவு செய்திருந்தேன். இப்போது எனது விருப்ப நாயகனான ஆர்யாவே நடிக்கவுள்ளார்.
பில்லாவைத் தொடர்ந்து ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பில்லா படத்தில் ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா, ரோபோட் படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளால், புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்யவுள்ளேன் என்றார்.
இதற்கிடையே, பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ், அஜீத்தை வைத்து தயாரிக்கவுள்ள படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. முதலில் கெளதம் மேனன் இயக்குவார் என பேச்சு நிலவியது குறிப்பிடத்தக்கது.