twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்

    By Siva
    |

    சென்னை: சிம்பு 2 விஷயங்களை செய்தால் மீண்டும் உயரலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்புவின் ரசிகர் மதன் கொலை செய்யப்பட்டார். பேனர் வைக்கும் பிரச்சனையில் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் மதனின் நினைவஞ்சலி போஸ்டர்களை சிம்புவே சுவர்களில் ஒட்டினார்.

    அதை பார்த்த மக்கள் ச்சே, இந்த சிம்புவுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு என்றார்கள்.

    விவேக்

    தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் விவேக்.

    காலம் தவறாமை

    காலம் தவறாமை

    சிம்பு என்றால் வம்பு, ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வராமல் இயக்குனரை கதறவிடுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளதை தான் விவேக் அப்படி கூறியிருக்கிறார் போல.

    சிம்பு

    சிம்பு

    ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு ரொம்பவே மாறிவிட்டார். வம்பு செய்யாமல், ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வந்து இயக்குனர் சொல்படி நடித்துக் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படியே

    சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது என்று விவேக் கூறியதை அவரின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

    English summary
    Actor Vivekh has appreciated Simbu's gesture for his dead fan. He has advised Simbu to follow two things to reach heights again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X