Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்
சென்னை: சிம்பு 2 விஷயங்களை செய்தால் மீண்டும் உயரலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்புவின் ரசிகர் மதன் கொலை செய்யப்பட்டார். பேனர் வைக்கும் பிரச்சனையில் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் மதனின் நினைவஞ்சலி போஸ்டர்களை சிம்புவே சுவர்களில் ஒட்டினார்.
அதை பார்த்த மக்கள் ச்சே, இந்த சிம்புவுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு என்றார்கள்.
|
விவேக்
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் விவேக்.
காலம் தவறாமை
சிம்பு என்றால் வம்பு, ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வராமல் இயக்குனரை கதறவிடுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளதை தான் விவேக் அப்படி கூறியிருக்கிறார் போல.
சிம்பு
ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு ரொம்பவே மாறிவிட்டார். வம்பு செய்யாமல், ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வந்து இயக்குனர் சொல்படி நடித்துக் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
அப்படியே
சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது என்று விவேக் கூறியதை அவரின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.