மருது ரிலீஸான அன்று விஷால் என்ன செய்து கொண்டிருந்தார்?
சென்னை: மருது படம் ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள மருது படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் எதிர்பார்த்தபடியே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருது சூப்பர் ஹிட்டாகியுள்ளதாக விஷாலின் நெருங்கிய தோழி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருட்டு டிவிடிகளை ஒழிக்க போராடும் விஷால் நடிப்பு, நடிகர் சங்க வேலைகள் என்று ரொம்ப பிசியாக உள்ளார். இந்நிலையில் மருது ரிலீஸான பிறகு விஷால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மருது சூப்பர் ஹிட்.. மாஸ் ஹீரோ இதை தான் செய்துள்ளார்... கலரிங்... ஹிஹிஹி என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











