twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குற்றமுள்ள நெஞ்சு ..... ?: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar

    By Siva
    |

    சென்னை: சர்கார் படத்தை எதிர்ப்பவர்கள் பற்றி சாந்தனு பாக்யராஜ் நச்சுன்னு கமெண்ட் அடித்துள்ளார்.

    சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது. இதையடுத்து இலவச பொருட்களை தீயில் போடும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. கோமவளவல்லி என்ற பெயரில் கோமள மியூட் செய்யப்பட்டுள்ளது. கொசு உற்பத்திக்கு பொதுப்பணித்துறை காரணம் என்று வரும் காட்சியில் பொதுப்பணித்துறை என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது.

    காட்சிகளை மறு தணிக்கை செய்ய வைத்தது திரையுலக பிரபலங்களுக்கு பிடிக்கவில்லை.

    சாந்தனு

    குற்றமுள்ள நெஞ்சு ..... ? என்று விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்யராஜ் ட்வீட்டியுள்ளார். அவர் யாரை பற்றி சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

    ராஜினாமா

    சாந்தனுவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் ராஜினாமா செய்யும் என்று கமெண்ட் போட அவரோ மூஞ்சிய காட்ட வெக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.

    அந்த கும்பலா?

    சாந்தனு யாரை பற்றி சொல்கிறார் என்று தெரிந்தும் தெரியாதது போன்று கேட்கிறார்களே

    பிரசன்னா

    மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்தலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    English summary
    Actors Prasanna and Shanthanu have commented about Sarkar issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X