எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்பது தெரிய வந்துள்ளது.
யாரோ தெலுங்கு நடிகர் பிரபாஸ் என்று பேசப்பட்ட அவர் பாகுபலி படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். மொழி வேறுபாடு இன்றி ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் அவருக்கு கிடைத்துள்ளனர்.
தற்போது அவர் உலகம் அறிந்த பாகுபலி பிரபாஸ் ஆவார்.

நடிப்பு
உலகில் எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்று தெரிய வந்துள்ளது. தான் நடிகராக முடிவு செய்ததற்கு காரணமான சம்பவம் குறித்து பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர்
1976ம் ஆண்டு வெளியான பக்த கண்ணப்பா என்ற படத்தை பார்த்த பிறகு தான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். பக்த கண்ணப்பா சிவன் பக்தர் ஒருவரை பற்றியை கதை.

சிவன்
நிஜ வாழ்க்கையில் பிரபாஸ் ஒரு சிவன் பக்தர். பாகுபலி படத்தில் சிவ பக்தராக அவர் நடித்திருப்பார். அவரின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கூட சிவு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலம்
பாகுபலி என்றதுமே பிரபாஸ் சிவலிங்கத்தை தனது தோளில் வைத்து நடப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த சிவலிங்க போஸ் உலக அளவில் பிரபலமானது.

வெற்றி
தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்ததால் தன் மீது நம்பிக்கை இழந்திருந்த பிரபாஸுக்கு பாகுபலி தான் பெரிய பிரேக் கொடுத்தது. உன்னால் முடியும் பிரபாஸ் என்று அவருக்கு தைரியம் சொல்லி பாகுபலியாக நடிக்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி.


Click it and Unblock the Notifications











