twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுத ஷாருக்கான்

    By Siva
    |

    Shahrukh Khan
    மும்பை: பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுதுள்ளார்.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான நடித்த ரா ஒன் இந்தி படம் ஓடவில்லை. அவர் அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். படத்தைப் பார்த்தவர்கள் ஷாருக்கானால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் மொக்கை போட முடிகிறது என்றனர். ஷாருக்கானும் அவரது தோழியும், நடிகையுமான ஜூஹி சாவ்லாவும் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள். ஐபிஎல் போட்டிகளின் முதல் 4 சீசனில் கொல்கத்தா அணி மோசமாக ஆடியது. இதனால் பலரும் ஷாருக்கை கண்டமேனிக்கு பேசினர். இந்நிலையில் ஐபிஎல் 5வது சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

    இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

    கடந்த 4 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்ற போதிலும், ரா ஒன் படத்தைப் பற்றியும் பிறர் மோசமாகப் பேசினர். அதைக் கேட்டு என் குழந்தைகளும், நானும் மனமுடைந்தோம். இப்படி நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தப்பாக பேசுகிறார்களே என்று நினைத்து நான் பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுதுள்ளேன். கொல்கத்தா அணி தொடர்ந்து 9 போட்டிகளில் தோற்றபோது கூட நான் அழவில்லை. ஆனால் பிறரின் மோசமான பேச்சைக் கேட்டுத் தான் அழுதுள்ளேன். எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் விளையாடி இருக்கிறேன். என்னைப் பற்றி கமெண்ட் அடித்தவர்களை விட எனக்கு நன்றாக கிரிக்கெட் தெரியும் என்றார்.

    English summary
    Superstar Shahrukh Khan is one of the most successful actors of Bollywood. He has carved a niche for himself and is undoubtedly the king of romance. But the actor says that he still gets affected by the negativity around him. And he cries for hours because of that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X