twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாருக்கான் வாழக்கையில் என்ன தான் நடக்குது?

    By Siva
    |

    Shahrukh Khan
    பாலிவுட் கிங் ஷாருக்கானின் திருமண வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

    சீரியல்களில் நடிக்கும் போதே கௌரியைப் பார்த்து காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்தவர் ஷாருக்கான். மனைவியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று பெயர் எடுத்திருந்தார். எங்கு சென்றாலும் கணவனும், மனைவியும் ஜோடியாக செல்வார்கள். இந்நிலையில் ஷாருக் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்.

    இது கௌரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த விவகாரத்தால் அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது பார்ட்டி, விருது விழா என்று எங்கு சென்றாலும் ஷாருக் தனியாகத் தான் செல்கிறார். கடந்த ஆண்டு ஐபில் போட்டிகளில் அரங்கிற்கு வந்து வீரர்களை ஊக்குவித்த கௌரி இந்த சீசனில் ஆளையே காணோம்.

    ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபில் கோப்பையை கைப்பற்றிதற்காக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தினார். அந்த விழாவிற்கும் ஷாருக் கான் தனியாகத் தான் வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். கௌரியைக் காணவில்லை.

    English summary
    WB CM Mamata felicitated KKR today at Eden garden. The team owner and Bollywood King Shahrukh Khan came alone. His wife Gauri is not accompanying him to any function now a days. Media is speculating whether his alleged affair with Priyanka Chopra is the reason for this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X