ஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்
Recommended Video

சென்னை: செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் சிம்புவை தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சிம்புன்னா வம்பு என்ற பெயர் கோலிவுட்டில் இருந்தது. அதை மாற்றி தற்போது சமத்தாக மாறி வருகிறார் சிம்பு. சினிமா தவிர பொது விஷயங்களிலும் பொறுப்புடன் பேசி வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் வம்பு தும்பு எதுவும் செய்யாமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

சிம்பு
படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரவே மாட்டார் சிம்பு என்று பேசியவர்கள் கண் முன்பு செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்ததுடன் இயக்குனர் சொன்னபடியே நடித்துக் கொடுத்தார். இது சிம்புவா என்று அனைவரையும் வியக்க வைத்தார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.

மணிரத்னம்
செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்புவின் வீட்டில் அவரின் சிறுவயது புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்குமாம். ஒரு நாள் படப்பிடிப்பில் பிரேக்கின் போது சும்மா உட்கார்ந்திருந்த சிம்புவை பார்த்த மணிரத்னம் அவரின் கையை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றாராம். மணி சார் எதற்காக சிம்புவை இப்படி இழுத்துச் செல்கிறார் என்று அனைவரும் அவரையே பார்த்துள்ளனர்.

கோரிக்கை
சிம்புவை இழுத்துச் சென்று அவரின் சிறுவயது புகைப்படங்களை காட்டியுள்ளார் மணிரத்னம். நான் உன்னை சின்னப் புள்ளையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான் எங்கு சென்றாலும் உன் ரசிகர்கள் அப்டேட் கேட்கிறார்கள். நீ அவர்களுக்காக மாற வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம் மணி.

சம்பளம்
மணிரத்னத்தின் அறிவுரையை கேட்ட சிம்பு, சார் நீங்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள். சம்பளத்தை கரெக்டாக கொடுக்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் உங்களை போன்று இல்லையே. நான் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். சிம்பு சொல்வதை பார்த்தால் அஅஅ படத்தில் பிரச்சனை ஏற்பட்டதற்கு சம்பள பாக்கி தான் காரணமோ?


Click it and Unblock the Notifications











