சிவகார்த்திகேயனை போன்று விஷால், சிம்புவை மிரட்டியது யார்?
சென்னை: சிவகார்த்திகேயனை போன்று சிம்பு மற்றும் விஷாலும் கஷ்டப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடுமாறு கூறி கண்ணீர் விட்டார். தன்னை சிலர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரை மிரட்டியது யார் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிம்புவோ அந்த மிரட்டல்கார்கள் யார் என்று எனக்கும் தெரியும், அவர்களுக்கு மிரட்ட மட்டுமே வரும் என்று சிவாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
என்னது, சிவாவை மிரட்டியவர்களை சிம்புவுக்கும் தெரியுமா என்று நினைக்கும்போது விஷால் சிவாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நானும் சிவகராத்திகேயனை போன்று கஷ்டப்பட்டுள்ளேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்களை இப்படி மிரட்டி அழ வைக்கும் நபர்கள் யார், யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முன்னணி ஹீரோக்களுக்கே இந்த நிலையா?


Click it and Unblock the Notifications











