Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பகல் கொள்ளைன்னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே கலாய்ச்சிருப்பீங்க - அருள்நிதி
வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, மவுன குரு படத்துக்குப பிறகு நடித்து வெளிவரும் படம் தகராறு. இதில் அவருக்கு ஜோடி பூர்ணா.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா, இயக்குநர் கணேசன், இசையமைப்பாளர் தரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது அருள்நிதியின் பேச்சு. மவுனகுரு படத்தின் பிரஸ்மீட்டில் பேசவே மறுத்து, பின் கொஞ்சம் முரட்டுத்தனமாகப் பேசி, திமிர் பிடித்தவர் போலிருக்கே என்ற கமெண்டுக்கு ஆளான அருள்நிதியா இந்தப் போடு போடுகிறார் என ஆச்சர்யமாக இருந்தது.
அவரது பேச்சு:
முதல் முறை, ஒரு முழுமையான ஹீரோவா நான் பண்ற படம் இந்த தகராறு. இதுக்கு முந்தைய படங்கள்ல வெகுளித்தனமா அல்லது ரொம்ப சீரியஸான கேர்கடர்கள்ல நடிச்சேன். ஆனால் இந்தப் படத்தில்தான் ஒரு ஹீரோவுக்குரிய அத்தனை விஷயங்களையும் செஞ்சிருக்கேன். அட, டான்ஸ் கூட போட்டிருக்கேங்க..
தயாரிப்பாளர் துரை (தயாநிதி அழகிரி) என் அண்ணன் என்பதை விட, நல்ல நண்பன்னு சொல்லலாம். நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உண்மையான நண்பன் அவன்.
இப்போல்லாம் கூடப் பிறந்தவங்க கூட அடுத்தவன் நல்லாருக்கணும்னு நினைக்கிறதில்லை. குடும்பத்துக்குள்ளேயே அடிச்சிக்கிறாஹ்க, சண்டைன்னு நீங்களே எழுதறீங்க... அதான் இப்போ தகராறுன்னு தலை்பபே வச்சிட்டோம்.
நான் எல்லாரையும் சொல்லல, சிலர் அப்படித்தான் இருக்காங்க. ஆனா எங்க குடும்பத்துல யாரும் அப்படி இல்ல. அதுக்கு பெரிய உதாரணம் துரை.
இந்தப் படத்துக்கு முதலில் பகல் கொள்ளை என்றுதான் பேர் வச்சோம். அப்புறம் இந்தத் தலைப்பை வச்சி நீங்க எப்படியெல்லாம் கலாய்ப்பீங்க என்று நினைச்சிப் பார்த்துதான் வேற தலைப்பு வச்சோம்," என்றார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!