twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலா கூப்பிட்டார்.. கதை கூட கேக்கல.. சண்டி வீரனாயிட்டேன்! - அதர்வா

    By Shankar
    |

    அதர்வாவின் கேரியரைப் பொருத்தவரை, பாலாவின் பரதேசிக்கு முன்; பரதேசிக்குப் பின் என்ற நிலைதான்.

    Why Atharva accepts Sandi Veeran?

    அதுவரை படங்களில் ஹீரோ என்ற பெயரில் சும்மா வந்து போய்க் கொண்டிருந்தவரை, பண்பட்ட நடிகராக்கினார் பாலா.

    இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். அந்த நன்றிக்கடனை ஏகத்துக்கும் மனசில் வைத்திருக்கும் அதர்வா, பாலா கூப்பிட்டதுமே ஒப்புக் கொண்ட படம் சண்டி வீரன்.

    Why Atharva accepts Sandi Veeran?

    களவாணி புகழ் சற்குணம் இயக்கும் இந்தப் படம் குறித்து அதர்வா நம்மிடம் பேசுகையில், "எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து உடனே வரச் சொல்லி அழைத்தார். உடனே போய்விட்டேன். 'கதை ஒன்று கேட்டேன். அதில் நீ நடிக்க வேண்டும்' என்று கூறினார். நான் என்ன கதை, யார் இயக்குநர் என்று கூடக் கேட்கவில்லை. உடனே ஓகே சொன்னேன்.

    அதன் பிறகுதான் தெரியும், இயக்குநர் சற்குணம் என்பது. ‘களவாணி' படத்தை பார்த்ததிலிருந்தே சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது ரொம்ப புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.

    Why Atharva accepts Sandi Veeran?

    இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடி கயல் ஆனந்தி. அவர் கூறுகையில், "நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது," என்றார்.

    ‘சண்டி வீரன்' படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

    English summary
    Actor Atharva says that he has accepted Sandi Veeran movie just because of his mentor Bala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X