Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி
திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிக்க வரும் முன்பே இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததன் காரணத்தை மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் துல்கருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். துல்கர் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து மம்மூட்டி மலையாள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
திருமணம்
ஒரு மனிதனின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டால் பொறுப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும்.
மம்மூட்டி
திருமணம் செய்து கொண்டதால் நான் அறிந்து கொண்டதை தான் மக்களுக்கு சொல்கிறேன். என் மகன் என் வழியை பின்பற்றுகிறார். அதனால் தான் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார் துல்கர்.
துல்கர்
திருமணம் குறித்து நானும், என் மனைவியும் துல்கருடன் பேசினோம். அவரும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அமல் சுபியாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார் மம்மூட்டி.
பேத்தி
துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்துள்ளனர்.