Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஜிஎஸ்டிக்கு எதிராக தல, தளபதி ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை?: ஜெயம் ரவி
சென்னை: ஜிஎஸ்டி வரிக்கு எதிராக அஜீத் மற்றும் விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஜெயம் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு ஒரே தேசம் ஒரே வரி என்று கூறி கடந்த 1ம் தேதி ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி போதாது என்று தமிழக அரசு கேளிக்கை வரி வேறு விதித்தது. இதை கண்டித்து தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நான்கு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் ஜெயம் ரவி கூறியிருப்பதாவது,
ஜிஎஸ்டி வரியால் தமிழ் திரையுலகிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலேயே தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிஎஸ்டிக்கு எதிராக அஜீத், விஜய் போன்ற பிரபல நடிகர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. திரையுலகிற்கு பிரச்சனை என்று வந்தால் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஆனால் தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என்றார்.