வீட்டில் இருந்து கொண்டே அஜீத் ஏன் மலேசியா விழாவில் பங்கேற்கவில்லை?
Recommended Video

சென்னை: வீட்டில் இருந்து கொண்டே அஜீத் ஏன் மலேசியா நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட விஷால் அன்ட் கோ மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. அவர்கள் கட்டிடம் கட்ட நாம் பணம் தர வேண்டுமா என்று மலேசியா மக்கள் ஃபீல் பண்ணியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மலேசியா கலைவிழாவில் அஜீத் கலந்து கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது.

மலேசியா
அஜீத் வீட்டில் சும்மா இருந்தும் மலேசியா நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அவரை விழாவுக்கு அழைத்தபோது அவர் ஒரேயொரு கேள்வி கேட்டாராம்.

கட்டிடம்
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நடிகர்கள் தான் பணம் போட வேண்டும் என்று அஜீத் தெரிவித்துள்ளார். நாம் தான் நிறைய சம்பாதிக்கிறோமே நாமே செலவு செய்து கட்டிடம் கட்டலாமே என்று அஜீத் கேட்டாராம்.

கேள்வி
நடிகர் சங்க கட்டிடம் கட்டுகிறேன் என்று கூறி இன்னும் எத்தனை நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அந்த கட்டிடத்திற்கு ஏன் அவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று மக்களும் கேட்கத் துவங்கிவிட்டனர்.

தனுஷ்
நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ஆனால் அவரது மருமகன் தனுஷ் பங்கேற்கவில்லை. தளபதி விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, சந்தானம், சிபிராஜ் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











