1,330 குறளில் கமல் ஹாஸன் ஏன் அந்த குறளை தேர்வு செய்தார்?
சென்னை: சசிகலா முதல்வராக தேர்வாகியுள்ள நிலையில் கமல் ஹாஸன் ஏன் அந்த குறளை ட்வீட் செய்தார் என்று நெட்டிசன்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.

இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸன், பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
குறள் (பிழை நீக்கியது)
என்ற குறளை ட்விட்டரில் வெளியிட்டார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் கமல் ஏன் குறிப்பாக அந்த குறளை தேர்வு செய்தார் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
@ikamalhaasan கமல் ஏன் இந்த ட்வீட் போட்டாருன்னு புரியாதவங்க
இதுக்கு முன்னாடி பின்னாடி உள்ள குறள் படிங்க புரியும்
@RameshWrits


Click it and Unblock the Notifications











