Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விரைவில் டும் டும் டும்: காஞ்சி காமாட்சிக்கு மாங்கல்ய பூஜை செய்த விஷால்
சென்னை: நடிகர் விஷால் திடீர் என தனது பெற்றோருடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
துப்பறிவாளன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால் வியாழக்கிழமை தனது பெற்றோருடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தான் கோவிலுக்கு செல்வதாக கூறப்பட்டது.
உண்மையில் அவர் கோவிலுக்கு சென்றதற்கு வேறு காரணம் உள்ளது.
கோவில்
காலை 9.30 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்த விஷால் 12 மணிக்கு மேல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தியதுடன் மாங்கல்ய பூஜையும் நடத்தி பிரார்த்தனை செய்தார்.
நடிகர் சங்கம்
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக விஷால் வேண்டிக் கொண்டாராம். ஆனால் அவர் கோவிலுக்கு வந்ததன் நோக்கம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
திருமணம்
விஷாலுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அவர் மாங்கல்ய பூஜை நடத்தியுள்ளார். அவரது தங்கைக்கு விரைவில் திருமணமாம். திருமணம் நல்லபடியாக நடக்கவே விஷால் மாங்கல்ய பூஜை செய்தாராம்.
மகிழ்ச்சி
காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அம்மன் முன்பு இருந்து அபிஷேகத்தை பார்த்து மகிழ்ந்தேன். முதல்வர் குணமடைந்து விரைவில் பணிகளை தொடர வேண்டும். நடிகர்களுக்கு நல்லது செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?