Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஓ காதல் கண்மணி' படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது: துல்கர் சல்மான்
சென்னை: ஓ காதல் கண்மணி படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள காதல் படம் ஓ காதல் கண்மணி. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் சனிக்கிழமை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது துல்கர் சல்மான் கூறுகையில்,
இது என் கனவுப் படம். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த ஓராண்டும் கனவு போன்று இருந்தது. அந்த கனவில் இருந்து கண் விழிக்கவே கூடாது என்று தோன்றியது. தொடர்ந்து அதே கனவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது மேஜிக் போன்று இருந்தது. இது கனவுக் குழு.
என் கனவில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதால் படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது என்றார்.