Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த பிரச்சனை ஞாபகம் இருக்கா.. கமல் 60க்கு சிவகார்த்திகேயனை அழைக்காததற்கு காரணம் இதுதானாம்!
Recommended Video
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் கமல் 60க்கு அழைக்கப்படாததற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் அவரது 65வது பிறந்த நாளை முன்னிட்டும் கமல் 60 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உங்கள் நான் என்ற இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பல பிரபலங்கள்
முன்னணி நடிகர்கள் மற்றும் கமலுடன் இணைந்து நடித்த அக்கால இக்கால நடிகைகள் மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் விஜயும் அஜித்தும் பங்கேற்கவில்லை.
அழைப்பு விடுக்கப்படவில்லை
அதேபோல் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது கமல் தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது.
அப்போது நடந்த சம்பவம்
இந்நிலையில் சிவகார்த்திகேயேனுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு காரணம் என்னவென்று ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், தன்னை ரஜினி ரசிகர் என்று கூறிக்கொண்டு கமலை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
விமான நிலையத்தில் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனின் ரசிகர்கள் தாக்கினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதான் காரணம்
இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் இன்னும் உள்ளுக்குள் புகைத்துக்கொண்டுதான் இருக்கிறதாம். அதனை மனதில் வைத்துதான் கமல் 60க்கு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.