Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மெர்சல் விவகாரம்.... விஐய் மெளனம் ஏன்?
அக்டோபர் 18ல் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வரி பற்றி சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டனக் கருத்தை வெளியிட்டார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்.
அகில இந்திய அளவில் ராகுல் காந்தியும், மாநில அளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.
Recommended Video
தேசிய அளவில் இது டிரெண்ட் ஆனதால், வட இந்திய தியேட்டர்களில் தமிழ் படங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே திரையிடப்படும் நிலை மாறி மெர்சல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட தொடங்கியுள்ளது.
இருப்பினும் இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை. நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
'கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவேன், மக்கள் பணியாற்ற வருவேன்' என்று முழங்கிய விஜய் தன் படத்துக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய குற்றச்சாட்டு, கேள்விகளுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார். அதே வேளை தனக்கு ஆதரவாகக் கருத்து சொன்னவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், டிவிட்டர் மூலமும் நன்றி சொல்லி வருகிறார்.
அவர் எப்போது வெளிப்படையாக பேசுவார்?
- ராமானுஜம்