போதும்டா சாமி, இனி இந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்: அலுத்துக்கொள்ளும் ஹீரோ
மும்பை: இனி தனது முன்னாள் காதலி கத்ரீனா கைஃபுடன் சேர்ந்து நடிக்கப் போவது இல்லை என்று பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகளாக காதலித்து வந்த பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் காதலர்களாக இருக்கும்போது துவங்கப்பட்ட ஜக்கா ஜசூஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனுராக் பாசு இயக்கி வரும் படத்தை அவருடன் சேர்ந்து தயாரிப்பது ரன்பிர் கபூர். படப்பிடிப்பில் ரன்பிரும், கத்ரீனாவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது இயக்குனருக்கு சங்கடத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் ரன்பிர் அனுராக் பாசுவிடம் கூறியிருப்பதாவது,
இனி நான் கத்ரீனாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன். இது தான் அவருடன் சேர்ந்து நான் நடிக்கும் கடைசி படம். முடிந்தால் இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











