பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரசிகர்கள் ரெடி.. விஜய் தயாரா?
வரும் 22ஆம் தேதி விஜக்கு 40வது பிறந்தநாள். இந்த ஆண்டு கொண்டாடுவாரா அல்லது கடந்த ஆண்டைப் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்ற ஆண்டு விஜய் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்தனர் ரசிகர்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் எல்லாம் அமைத்தார்கள். ஆனால் பல அரசியல் காரணங்களால், ஏற்பாடு செய்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது.

கடுப்பான விஜய், தன் பிறந்தநாளன்று வழக்கமாக செய்யும் எந்த நற்பணிகளையும் செய்யாமல், அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஜில்லா ஷூட்டிங்கில் அனைவருக்கும் பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து வந்த 'தலைவா' படப்பிரச்சனையாலும் பல மன உலைச்சல்களை அனுபவித்தார் விஜய். ஆனால், இந்த ஆண்டு அவர் ரசிகர்களுக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது. இப்போதே தோரணங்கள், மன்ற கொடிகள் என அசத்தத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். விஜய்யும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன சந்தோஷத்தில் இருக்கிறார்.
நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சியில் விஜய் தன் மனைவியோடு கலந்துகொண்டார்.
ரசிகர்கள் நடத்துக்கிற பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











