Don't Miss!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அரசியலில் நுழைவாரா விஜய்?
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குனர் சந்திரசேகர் மாலையில் பரிசுகளை வழங்கினார். பின்னர் 2 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அவர் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஓட்டப் போட்டியில் முதலில் வேகமாக ஓடியவர்கள், தோல்வியை தழுவினர். ஆனால்
நிதானமாக ஓடியவர்கள் வெற்றி பெற்றனர். இது எல்லா செயலுக்கும் பொருத்தும்.
நான் மாவட்ட வாரியாக விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறேன். பெரும்பாலான ரசிகர்கள் சினிமா பைத்தியங்களாக உள்ளனர்.
நடிகர், நடிகைகளுக்கு கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது, ரசிகர்களுக்குள் சண்டை போடுவது என உள்ளனர். போஸ்டர் ஒட்டுவது, விசில் அடிப்பது போன்றவற்றால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.
ரசிகர் மன்றத்தினர் சகோதர உணர்வோடும், சமுதாய சிந்தனையோடும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதற்காகவே நான் மாவட்டம் தோறும் சென்று ரசிகர் மன்றத்தினரை சந்தித்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகர்களுக்கு இப்படி ஒரு கொடுப்பினை உள்ளது. நானோ அல்லது எனது மகனோ எந்த கட்சியிலும் இணையவில்லை. நாங்கள் அரசியலில் நுழைவோமா என்பதை காலம்தான்
முடிவு செய்யும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியல் உணர்வு எல்லோருக்கும் உண்டு என்றார் எஸ்.ஏ.சி.