Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசியலில் நுழைவாரா விஜய்?
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குனர் சந்திரசேகர் மாலையில் பரிசுகளை வழங்கினார். பின்னர் 2 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அவர் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஓட்டப் போட்டியில் முதலில் வேகமாக ஓடியவர்கள், தோல்வியை தழுவினர். ஆனால்
நிதானமாக ஓடியவர்கள் வெற்றி பெற்றனர். இது எல்லா செயலுக்கும் பொருத்தும்.
நான் மாவட்ட வாரியாக விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறேன். பெரும்பாலான ரசிகர்கள் சினிமா பைத்தியங்களாக உள்ளனர்.
நடிகர், நடிகைகளுக்கு கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது, ரசிகர்களுக்குள் சண்டை போடுவது என உள்ளனர். போஸ்டர் ஒட்டுவது, விசில் அடிப்பது போன்றவற்றால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.
ரசிகர் மன்றத்தினர் சகோதர உணர்வோடும், சமுதாய சிந்தனையோடும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதற்காகவே நான் மாவட்டம் தோறும் சென்று ரசிகர் மன்றத்தினரை சந்தித்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகர்களுக்கு இப்படி ஒரு கொடுப்பினை உள்ளது. நானோ அல்லது எனது மகனோ எந்த கட்சியிலும் இணையவில்லை. நாங்கள் அரசியலில் நுழைவோமா என்பதை காலம்தான்
முடிவு செய்யும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியல் உணர்வு எல்லோருக்கும் உண்டு என்றார் எஸ்.ஏ.சி.