Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்கள் செக்ஸுக்கு மட்டுமே லாயக்கு: பிரபல நடிகர் திமிர் பேச்சு
ஹைதராபாத்: பெண்களால் மனஅமைதி பாதிக்கப்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் படுக்கைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தனது மகன் நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரை வைத்து தயாரித்துள்ள ராரண்டோய் வேதுகா சுதம் பட நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ்(73) பெண்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
பெண்கள்
பெண்களால் மன அமைதி கெடும் என்று படத்தில் நாக சைதன்யா வசனம் பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
சலபதி ராவின் பேச்சை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து வெட்கி தலைகுனிந்தனர். சலபதி ராவ் பேசியது சில தெலுங்கு சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
|
நாகர்ஜுனா
சலபதி ராவ் பேச்சு குறித்து நாகர்ஜுனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் தனிப்பட்ட முறையில் மற்றும் என் படங்களில் எப்பொழுதுமே பெண்களை மதிப்பவன். நான் சலபதி ராவின் பேச்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி நடிகை அனுஷ்காவின் தொடையை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.