Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கருணாநிதி ஆரோக்க்கியத்துடன் வாழ ராகவேந்திர சாமியை வேண்டுகிறேன்-லாரன்ஸ்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று தொடங்கிய 2ம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் லாரன்ஸ் குழுவினரின் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் ஸடாலினின் மனைவி துர்க்கா, மு.க.அழகிரியின் துணை காந்தி அழகிரி ஆகியோர் இதை பார்த்து ரசித்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் லாரன்ஸ் பேசுகையில், எங்களது குழந்தைகள் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சந்தோஷமாக உள்ளனர். இது மிகப் பெரிய நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்கிறோம் என்பது சந்தோஷமாக உள்ளது.
நாங்கள் கேட்காமலேயே இந்த உதவியைச் செய்துள்ளார் கலைஞர். அவருக்கு நன்றி.
நான் நடத்தி வரும் அறக்கட்டளையில் 100 பேர் படித்து வருகிறார்கள். அதில் 35 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்தார் கலைஞர்.
இன்று 10 மாற்றுத் திறனாளிகள்தான் மேடையில் ஏறி ஆடியுள்ளனர். அடுத்து 1000 பேரை ஆட வைக்க விரும்புகிறேன். இதற்காக நடனப் பள்ளி தொடங்க முடிவு செய்துள்ளேன். கலைஞரும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். அவர் செய்வார்.
கலைஞர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க நான் வணங்கும் ராகவேந்திரா சாமியை வேண்டுகிறேன் என்றார் லாரன்ஸ்.