Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவர் வீட்டார் வேலைக்காரி போல நடத்தினர்-காவ்யா மாதவன்
காவ்யா மாதவனுக்கும், மலையாளியான நிஷால் சந்திரா என்பவருக்கும் கல்யாணம் ஆனது. ஆனால் சில மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து தாய் வீடு திரும்பினார் காவ்யா. பின்னர் எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தார்.
அதில், கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். என்னை ஒரு வேலைக்காரி போல நடத்தினர். வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள்.
திரைப்படத்துறையில் பிரபலமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார்கள். என்னை மிருகத்தைப்போல எண்ணி நரக வேதனை அடைய செய்தார்கள். அதைத்தொடர்ந்துதான் நான் விவாகரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று கூறியுள்ளார் காவ்யா.
மனுவை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காவ்யாவின் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது.