Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸ்வர்யாவுக்கு இன்று 37வது பிறந்த நாள்-குடும்பத்தினருடன் கொண்டாட்டம்
நேற்று நள்ளிரவிலிருந்தே ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கி விட்டதாம். இன்று காலை தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் புடை சூழ வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பிறந்த நாள் குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில், நாங்கள் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம் (நேற்று). நள்ளிரவாகி விட்டது. எனது மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். மருமகளே, இதுவரை நடந்த சாதனைகளை விட இன்னும் பல பெரிய சாதனைகளை புரிவாயாக என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார் அமிதாப்.
இன்று மதியம் தனது கணவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீல நிற உடையில் கையில் மெஹந்தியுடன் படு ஜோராக காணப்படுகிறார் ஐஸ்வர்யா.