Don't Miss!
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐஸ்வர்யாவுக்கு இன்று 37வது பிறந்த நாள்-குடும்பத்தினருடன் கொண்டாட்டம்
நேற்று நள்ளிரவிலிருந்தே ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கி விட்டதாம். இன்று காலை தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் புடை சூழ வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பிறந்த நாள் குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில், நாங்கள் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம் (நேற்று). நள்ளிரவாகி விட்டது. எனது மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். மருமகளே, இதுவரை நடந்த சாதனைகளை விட இன்னும் பல பெரிய சாதனைகளை புரிவாயாக என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார் அமிதாப்.
இன்று மதியம் தனது கணவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீல நிற உடையில் கையில் மெஹந்தியுடன் படு ஜோராக காணப்படுகிறார் ஐஸ்வர்யா.