Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படம் எடுக்கும் பூமிகா
ரோஜாக் கூட்டம் மூலம் தமிழுக்கு வந்த பூமிகா அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்குக்குப் போனார். அப்படியே கல்யாணத்தையும் முடித்துக் கொண்டார்.
கல்யாணமான பின்னரும் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பூமிகா தற்போது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் பூமிகா. எனக்கு இதுவரை இப்படி ஒரு ஹோம்லியான கேரக்டர் வந்ததே இல்லை. மேலும், கதையும் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தப் படத்திற்குப் பின்னர் நான் மிகப் பெரிய அளவில் பேசப்படுவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பூமிகா.
தற்போது தெலுங்கில் தகிட தகிட என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து வரும் பூமிகா, அடுத்து தமிழிலும் யாகம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். இப்படத்தில் இவரே ஹீரோயினாக நடிக்கலாமாம்.
தமிழ்ப் படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் பூமிகா.