Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்-ஸ்னிக்தா
தொடர்ந்து ஒற்றைப் பாடலில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் நடிக்க விரும்பவில்லையாம் அவர்.
நான் நல்ல டான்ஸர் மட்டுமல்ல... நல்ல நடிகையும் கூட. அதை நிரூபிக்க சான்ஸ் கொடுங்கள் என்பதுதான் என்னை ஒரு பாட்டுக்கு அழைக்கும் இயக்குநர்களுக்கு நான் சொல்லும் பதில், என்கிறார் ஸ்னிக்தா.
மேலும் அவர் கூறுகையில், இப்போது 'ராஜாதி ராஜா' படத்தில் லாரன்ஸுடன் ஜோடியாக நடிக்கிறேன். படத்தில் 5 நடிகைகள் இருந்தாலும் படம் முழுவதும் நான் வருகிறேன்.
அடுத்து, என்னை 'அஞ்சாதே'யில் அறிமுகப்படுத்திய மிஷ்கின் இயக்கத்தில் 'நந்தலாலா'வில் நடிக்கிறேன். இந்த படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போதைக்கு வேறு படங்கள் வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்தவுடன் நிச்சயமாக என் நடிப்பு பேசப்படும், என்கிறார் நம்பிக்கையுடன்.
அடுத்த கேள்வியைத் தொடங்கும் முன்பே, அதை யூகித்து விட்டவரைப் போல இப்படிச் சொன்னார்:
எனக்கு என் மனசாட்சிதான் முக்கியம். நான் நல்ல நடிகை மட்டுமல்லை, நேர்மையானவளும் கூட. அதனால் என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களுக்கு பதில் சொல்வதே இல்லை, என்றார் அழுத்தமாக.
இதை யாரும் கேட்கவேயில்லையே!