Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஐயிட்டம்' விரும்பும் மல்லிகா!
வழக்ககாக குத்தாட்டம் ஆடுவோருக்கு கதாநாயகியாக ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமோ என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் டெல்லி அழகி மல்லிகா கபூர் தலைகீழாக இருக்கிறார்.
ஹீரோயினாக நடிப்பதை விட ஐட்டம் பாட்டுக்கு ஆடுவதுதான் தனக்கு விருப்பமாக இருப்பதாக தெரிவிக்கிறார் மல்லிகா. அத்தோடு நில்லாமல் தன்னை வைத்து ஒரு குத்துப் பாட்டு எடுங்களேன் என்று தயாரிப்பாளர்களிடம் அன்போடு கேட்டு வருகிறாராம்.
அந்தோணி யார் பட செட்டில் மல்லிகாவை சந்தித்தபோது, ஹீரோயினாக, டூயட் பாடிக் கொண்டு, அழகுப் பதுமையாக வந்து போவது போரடிக்கிறது (ஆத்தா நடிச்சது நாலே படங்கள்தான்!).
எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஐட்டம் பாட்டுக்கு ஆடுவதுதான் விருப்பமானது. ஆனால் ஹீரோயின் வாய்ப்பாகத்தான் வந்தது. இதனால்தான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பிற நாயகிகளின் படங்களில் குத்துப் பாட்டுக்கு ஆடத்தான் எனக்குப் பிடிக்கிறது என்கிறார்.
அந்தோணி யார் படத்தில் மீனவப் பெண்ணாக வருகிறாராம் மல்லிகா கபூர். இதுதவிர கங்கா காவிரி என்ற ஒரு படமும் இருக்கிறதாம்.
கையில் ஹீரோயின் வாய்ப்பு இல்லாததால்தான் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார் மல்லிகா என்கிறார்கள்.