'ப்ராப்பர்ட்டி' சேர்ப்பதில் மீரா ஜாஸ்மின் கெட்டி!
ரன் படம் மூலம் மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடைத்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துவிட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு சொத்து சேர்ப்பதிலும் கெட்டிக்காரியாக உள்ளார்.
சொந்தமாக தொழில் செய்தால் கூட முதலீடு போட வேண்டும் அதில் லாபம் வருமா, வராதா என்று சொல்ல முடியாது. அதனால் மீரா ஜாஸ்மின் நிலையான வருமானம் வரும் வழியைத் தேர்வு செய்துள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பங்களாக்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். மாதம் பிறந்தால் கைநிறைய வாடகைப் பணம் வருகிறது.
பார்க்க சாதுவா இருந்தாலும் பிழைக்கத் தெரிந்தவர் தான்!


Click it and Unblock the Notifications
