Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காணாமல் போன நடிகை காதலன் வீட்டில் கண்டுபிடிப்பு
ஈரோடு மாவட்டம் கோபி குன்னத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லு என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த படத்தில் 2-வது கதாநாயகியாக ருக்சனா நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நடிகை ருக்சனா மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ருக்சனாவின் காட்சிகள் எடுக்க முடியாமல் படப்பிடிப்பும் தடைபட்டது.
இதுகுறித்து படப்பிடிப்பு குழுவின் மேலாளர் ஈஸ்வரன் கோபி போலீசில் புகார் செய்தார். அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் மாயமான நடிகை ருக்சனாவுக்கும் கேரள மாநிலம் கண்ணனூரைச்சேர்ந்த தொழில் அதிபர் சரத்குமார் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும், காதலனுடன் ருக்சனா ஓடி விட்டதாகவும் கூறப்பட்டது.
கோபி போலீசார் கேரளா மாநிலம் சென்று மாயமான நடிகை ருக்சனாவை தேடி வந்தனர்.
கண்ணனூரில் ருக்சனா, அவரது காதலன் வீட்டில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு ருக்சனா, 'நான் நடிக்க வேண்டிய காட்சிகளை ஜனவரி மாதம் வந்து நடித்து கொடுத்து விடுகிறேன். இப்போது என்னை சுதந்திரமாக விடுங்கள்' என்று கூறிவிட்டாராம்.