கிளாமரை கேட்டு வாங்கும் அஞ்சலி

கற்றது தமிழ் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அஞ்சலி. முதல் படத்தில் நடிப்பில் நச்சென்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி.
ஆனால் அதன் பின்னர் அவர் சரிவர காணப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அங்காடித் தெரு படத்தில் நடித்துள்ளார். இப்படம் தன்னைத் தூக்கி விடும் என்ற மகா நம்பிக்கையில் உள்ளார். படம் ரிலீஸான பின்னர் சம்பளத்தையும் ஏற்றத் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த நிலையில் தன்னைத் தேடி வரும் படங்களில் புக் ஆகிக் கொண்டிருக்கும் அஞ்சலி, தனக்கு படத்தில் கூடுதலாக கிளாமர் காட்சிகளை வையுங்கள் என்று இயக்குநர்களிடம் கோரிக்கை வைக்கிறாராம்.
அஞ்சலியின் தாயாரும் இதை ஊக்குவிக்கிறாராம். இப்போதுள்ள ஹீரோயின்களுக்கு எனது மகள் எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை. எனவே தாராளமாக, கிளாமராக யூஸ் பண்ணிக்குங்க என்கிறாராம் தாயார்.
அஞ்சலியும் கவர்ச்சிக குளத்தில் குதித்திருப்பதால் கிளாமரை மட்டுமே நம்பியுள்ள சில கதாநாயகிகள் சற்றே பீதியடைந்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











