Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் அபர்ணா!
காரணம்?. அவர் நடித்த 'கண்ணுக்குள்ளே' திரைப்படம் வெளியாகி அபர்ணாவுக்கு நல்ல பெயரையும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளதாம்.
படம் பார்த்த எல்லாருமே 'உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கலே... நல்ல பக்குவப்பட்ட நடிப்பு' எனப் பாராட்டித் தள்ளுகிறார்களாம்.
"என் கேரியரில் இதுதான் திருப்பு முனை. ஆனால் அதுக்காக இதேதான் என் ரூட்டுன்னு நினைச்சிடாதீங்க.
இளமை, குறும்பு கொப்பளிக்கிற கதைகள் வந்தாலும் வெளுத்துக் கட்டுவேன்... கண்ணுக்குள்ளே படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். என் வயசு கதாநாயகிகள் நடிக்க யோசிக்கிற கேரக்டர்தான். ஆனால் அந்தக் கதை, அந்தப் பாத்திரத்தின் தன்மை என்னை அப்படி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தது..." என்றார்.
நடித்து சம்பாதித்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையில் இல்லை அபர்ணா. நினைத்தால் நாளையே சொந்தப்படம் எடுக்கும் அளவு வசதியானவர் அம்மணி. ஆனால் நடிப்பு மீதுள்ள தாகமும் காதலும்தான் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தூண்டுகிறதாம். ஆனாலும் ரொம்ப உஷார் பார்ட்டி... என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சொந்தப்படம் மட்டும் எடுக்க மாட்டாராம் (ரொம்ப தெளிவு)!
அடுத்து இவர் நடிக்கும் புதிய படம் ஏராளமான பாராட்டுகளை சர்வதேச தமிழர்களிடமிருந்து தனக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் அபர்ணாவுக்கு வலுவான கேரக்டராம்.
அந்தப் படத்தில் நடித்து அனுபவம் குறித்து அபர்ணா இப்படிச் சொல்கிறார்:
"சென்னைக்கு வெளியே ஒரு பொட்டல் காட்டில் கொண்டு போய் நடிக்க வைத்தார்கள். ரொம்ப கஷ்டமான அனுபவம்தான். தமிழ் ஈழப் பெண்ணாக நடிப்பதே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே, அங்கேயே இருப்பவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது...", என்றார் உண்மையான கரிசனத்துடன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்