Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் அபர்ணா!
காரணம்?. அவர் நடித்த 'கண்ணுக்குள்ளே' திரைப்படம் வெளியாகி அபர்ணாவுக்கு நல்ல பெயரையும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளதாம்.
படம் பார்த்த எல்லாருமே 'உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கலே... நல்ல பக்குவப்பட்ட நடிப்பு' எனப் பாராட்டித் தள்ளுகிறார்களாம்.
"என் கேரியரில் இதுதான் திருப்பு முனை. ஆனால் அதுக்காக இதேதான் என் ரூட்டுன்னு நினைச்சிடாதீங்க.
இளமை, குறும்பு கொப்பளிக்கிற கதைகள் வந்தாலும் வெளுத்துக் கட்டுவேன்... கண்ணுக்குள்ளே படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். என் வயசு கதாநாயகிகள் நடிக்க யோசிக்கிற கேரக்டர்தான். ஆனால் அந்தக் கதை, அந்தப் பாத்திரத்தின் தன்மை என்னை அப்படி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தது..." என்றார்.
நடித்து சம்பாதித்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையில் இல்லை அபர்ணா. நினைத்தால் நாளையே சொந்தப்படம் எடுக்கும் அளவு வசதியானவர் அம்மணி. ஆனால் நடிப்பு மீதுள்ள தாகமும் காதலும்தான் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தூண்டுகிறதாம். ஆனாலும் ரொம்ப உஷார் பார்ட்டி... என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சொந்தப்படம் மட்டும் எடுக்க மாட்டாராம் (ரொம்ப தெளிவு)!
அடுத்து இவர் நடிக்கும் புதிய படம் ஏராளமான பாராட்டுகளை சர்வதேச தமிழர்களிடமிருந்து தனக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் அபர்ணாவுக்கு வலுவான கேரக்டராம்.
அந்தப் படத்தில் நடித்து அனுபவம் குறித்து அபர்ணா இப்படிச் சொல்கிறார்:
"சென்னைக்கு வெளியே ஒரு பொட்டல் காட்டில் கொண்டு போய் நடிக்க வைத்தார்கள். ரொம்ப கஷ்டமான அனுபவம்தான். தமிழ் ஈழப் பெண்ணாக நடிப்பதே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே, அங்கேயே இருப்பவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது...", என்றார் உண்மையான கரிசனத்துடன்.