Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் அபர்ணா!
காரணம்?. அவர் நடித்த 'கண்ணுக்குள்ளே' திரைப்படம் வெளியாகி அபர்ணாவுக்கு நல்ல பெயரையும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளதாம்.
படம் பார்த்த எல்லாருமே 'உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கலே... நல்ல பக்குவப்பட்ட நடிப்பு' எனப் பாராட்டித் தள்ளுகிறார்களாம்.
"என் கேரியரில் இதுதான் திருப்பு முனை. ஆனால் அதுக்காக இதேதான் என் ரூட்டுன்னு நினைச்சிடாதீங்க.
இளமை, குறும்பு கொப்பளிக்கிற கதைகள் வந்தாலும் வெளுத்துக் கட்டுவேன்... கண்ணுக்குள்ளே படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். என் வயசு கதாநாயகிகள் நடிக்க யோசிக்கிற கேரக்டர்தான். ஆனால் அந்தக் கதை, அந்தப் பாத்திரத்தின் தன்மை என்னை அப்படி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தது..." என்றார்.
நடித்து சம்பாதித்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையில் இல்லை அபர்ணா. நினைத்தால் நாளையே சொந்தப்படம் எடுக்கும் அளவு வசதியானவர் அம்மணி. ஆனால் நடிப்பு மீதுள்ள தாகமும் காதலும்தான் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தூண்டுகிறதாம். ஆனாலும் ரொம்ப உஷார் பார்ட்டி... என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சொந்தப்படம் மட்டும் எடுக்க மாட்டாராம் (ரொம்ப தெளிவு)!
அடுத்து இவர் நடிக்கும் புதிய படம் ஏராளமான பாராட்டுகளை சர்வதேச தமிழர்களிடமிருந்து தனக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் அபர்ணாவுக்கு வலுவான கேரக்டராம்.
அந்தப் படத்தில் நடித்து அனுபவம் குறித்து அபர்ணா இப்படிச் சொல்கிறார்:
"சென்னைக்கு வெளியே ஒரு பொட்டல் காட்டில் கொண்டு போய் நடிக்க வைத்தார்கள். ரொம்ப கஷ்டமான அனுபவம்தான். தமிழ் ஈழப் பெண்ணாக நடிப்பதே இத்தனை கஷ்டமாக இருக்கிறதே, அங்கேயே இருப்பவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது...", என்றார் உண்மையான கரிசனத்துடன்.
-
அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
-
இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?